Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Super User / 2011 ஜூன் 20 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
1948ஆம் ஆண்டு பாண்டிருப்பு மறுமலர்ச்சி கழகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பாண்டிருப்பு பொது நூலகத்தை கல்முனை மாநகர சபையிடம் கையளிக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது.
பாண்டிருப்பு மறுமலர்ச்சிக் கழகத்தின் தலைவர் பி.எஸ்.புவிராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்முனை மாநகர மேயர் மசூர் மௌலானா பிரதம அதிதியாகவும் பிரதி மேயர் ஏ.ஏ.பஷீர் மற்றும் எதிக்கட்சி தலைவர் ஹென்றி மஹேந்திரன் ஆகியோர் விசேட அதிதியாகவும் கலந்துகொண்டனர்.
நிரந்தர கட்டிடமோ அல்லது இடமோ இல்லாத பாண்டிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு நூலகமான இதை கடந்த காலங்களில் தனியாரின் நிதிளுதவியுடன் நடாத்தப்பட்டு வந்தது.
அண்மையில் கல்முனை பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் நெக்டப் நிறுவனத்தினால் கட்டப்பட்ட பல்தேவைக் கட்டிடத்திலேயே தற்போது இயங்கிவரும் இந்நூலகத்தில் இரண்டு நூலகர்கள் சேவையாற்றி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
2 hours ago