2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அக்கரைப்பற்று பிரதேச வீட்டிலிருந்து வெடி பொருட்கள் மீட்பு

Super User   / 2011 ஜூலை 03 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று பிரதேச வீடு ஒன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மற்றும் வெடி பொருட்கள் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று முதலாம் பிரிவு சின்ன மௌலான வீதியில் உள்ள வீட்டை துப்பரவு செய்த போது உர பையினால் சுத்தப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் இருந்ததையடுத்து உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது 60 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டு ஒன்று டொங்கான் ரக குண்டு ஆறும்  மகசின் ஒன்று ஆகியன மீட்கப்பட்டன.

இந்த வீட்டில் கடந்த காலத்தில் தமிழ் அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவர் வாடகைக்கு இருந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்ததாக பொஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

7 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

7 hours ago - 0     - 6

மன்னிப்பு

7 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

7 hours ago - 0     - 5