Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூலை 24 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
மிஹிந்து கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் 'நீரும், மனிதனும்' எனும் (தேசிய நீர்ப்பாசன கலாசார கல்விக் கண்காட்சி) கல்விக் கண்காட்சி அம்பாறை நகர மண்டபத்தில் இன்று மிஹிந்து கலாசார மன்றத்தின் தலைவர் கலாசூரி சஜீத்சந்திர எதிரிசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உணவு மற்றும் போசாக்கு சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார்.
இக்கண்காட்சியில் நீரின் முக்கியத்துவம், நீர்ப்பாசன முறைமைகள், நீரின் பயன்பாடுகள், இலங்கையின் பிரதான வாவிகள், ஏரிகள், நீர்தேக்கங்கள், நீர்வீழ்ச்சிகள், விவசாய முறைமைகள், மதகின் கட்டமைப்பு மற்றும் விலங்கின்றி விளைச்சலினை பாதுகாக்க கையாண்ட உத்திகள் உட்பட நீர் சம்பந்தமான பல்வேறு விடயங்களின் படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இன்று முதல் நாள் நிகழ்வில் அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகல, அம்பாறை பிரதேச செயலாளர் ஜீ.எல்.ஆரியதாச, பிரதேச சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு கண்காட்சியினை பார்வையிட்டனர். இக்கண்காட்சி நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago