2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 15 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில்  கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை நேற்று சனிக்கிழமை மாலை கைதுசெய்துள்ளதாக தமண பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இறக்காமம் பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றை சோதனையிட்டபோது 5 கிராம் கஞ்சாவை  உடைமையில் மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

29 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X