2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

புதையல் தோண்ட முற்பட்ட எண்மர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 19 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

பொத்துவில், லாவுகலை மலைப் பகுதியில்  புதையல் தோண்டுவதற்கு முற்பட்டதாகக் கூறப்படும் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தங்களுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து லாவுகலை  மலைப்பகுதியை  நேற்று புதன்கிழமை மாலை 4.45 மணியளவில்  சுற்றிவளைத்தபோது, புதையல் தோண்டுவதற்கு முற்பட்டதாகக் கூறப்படும் 8 பேரை கைதுசெய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 3 அலவாங்குகள், 2 மண்வெட்டிகள்,  வெடிபொருள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

அம்பாறை, கண்டி, பொத்துவில் ஆகிய பிரதேசங்களைச் சோர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சந்தேக நபர்களை பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .