2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு சிறை

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 19 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, தமண பிரதேசத்தில் விபசார விடுதி நடத்தியமை மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட 33 வயதான  பெண் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பெண்ணுக்கு 5 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள  6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 76 ஆயிரத்து 500 ரூபாவை தண்டப் பணமாக செலுத்துமாறும் அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.பிரிங்கி நேற்று புதன்கிழமை உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு தமண, மடவலந்த பிரதேசத்தில் விபசார விடுதி நடத்தியமை மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவரை தமண பொலிஸார் கைதுசெய்து இவருக்கு எதிராக  நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். பின்னர் இவர் பிணையில் வெளிவந்துள்ளார்.

இவ்வழக்கு தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் நேற்று புதன்கிழமை அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவான்  எம்.எஸ்.பிரிங்கி  முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே நீதிவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .