2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நைஜீரிய பிரஜையை மிரிஹனவுக்கு மாற்றுமாறு உத்தரவு

Super User   / 2013 ஒக்டோபர் 02 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜையை மிரிஹன தடுப்பு முகாமுக்கு மாற்றுமாறு அக்கரைப்பற்று நீதவான் ரீ.சரவணராஜா இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இவர் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குறித்த நபரை பொலிஸார் விசாரணை செய்த போது கடவுச்சீட்டு மற்றும் விசா இல்லாத நிலையில் இலங்கையில் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபர் இன்று புதன்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் பொலஸாரினால் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது இவரை மிரிஹன தடுப்பு முகாமிற்கு மாற்றுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .