2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நிபந்தனையை மீறி ஆற்று மணல் ஏற்றியவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

நிபந்தனையை மீறி ஆற்று மணல் ஏற்றியதாகக் கூறப்படும் ஒருவரை நேற்று வியாழக்கிழமை காலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அம்பாறை, ஒலுவில் களியோட ஆற்றில் நிபந்தனையை மீறி ஆற்று மணல்  ஏற்றிய ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பாலமுனை, அஷ்ரப் நகரைச் சேர்ந்த 20 வயதான ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .