2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

அறுவடை ஆரம்பம்

Thipaan   / -0001 நவம்பர் 30 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார்


சில தினங்களுக்கு முன்பாக ஆரம்பமான வேளாண்மை அறுவடை மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. பலருக்கு இவ்வறுவடை மூலம் சுமாரான விளைச்சலும் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதேவேளை, ஒரு மூடை நெல்லுக்கான விலை தரத்துக்கேற்ப 2,200 ரூபாய் தொடக்கம் 2,500 ரூபாய் வரையான பணம் கிடைப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்னும் சில விவசாயிகளுடைய விவசாய நிலங்கள் கடந்த கால வெள்ளப்பெருக்கினால் அழிவுற்றதுடன், தற்போது நிலவும் அதிக வரட்சியால் முற்றாக சேதமடைந்து அறுவடை செய்ய முடியாமல் பாரிய நட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

இவ்வரட்சி இன்னும் ஒரு வாரத்துக்கு நீடிக்கும் பட்சத்தில் நீர்ப்பாய்ச்சல் வழங்க முடியாத ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாதிப்புள்ளாகும் நிலையும் உருவாகியுள்ளது.

மேலும் சில விவசாயிகள் உள்ளவற்றையாவது காப்பாற்றுவோம் எனும் நோக்கில் நீர்ப்பாய்ச்சல் வழங்க கூடிய இடங்களில் ஆற்று நீரினை பாய்ச்சுகின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக யானைகளின் தாக்குதலில் இருந்து தங்களது வயல் நிலங்களை பாதுகாக்கின்ற பணிகளில் இராப்பகலாக விவசாயிகள் ஈடுபட்டுள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது.
 




 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7