2025 ஜூன் 09, திங்கட்கிழமை

4 கிராம் கஞ்சா போதை பொருளுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2011 ஜூன் 02 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)
சுகாதார திணைக்களத்தில் கடமையாற்றும் பொது சுகாதார உத்தியோகத்தர் ஒருவரை கஞ்சா போதைப் பொருளுடன் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்

பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மேற்படி நபரை அக்கரைப்பற்று கடற்கரை வீதியில் வைத்து 4 கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நிந்தவூரைச் சேர்ந்வரென்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவக்கை எடுத்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .