Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 01, புதன்கிழமை
Freelancer / 2024 பெப்ரவரி 02 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் விலங்கறுமனை மற்றும் இறைச்சிக் கடைகள் யாவும் பூட்டப்படும் என மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அறிவித்துள்ளார்.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அறிவித்தலுக்கு அமைவாக, அன்றைய தினம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி, கோழியிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விற்பனை நிலையங்களையும் விலங்கறுமனைகளையும் திறக்காமல் மூடிவிடுமாறு சம்மந்தப்பட்டவர்களுக்கு கடிதம் மூலம் ஆணையாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இக்கடிதத்தின் பிரதிகள், பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
33 minute ago
34 minute ago
1 hours ago