2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கடற்கரையில் தோட்டாக்கள் மீட்பு

Freelancer   / 2022 பெப்ரவரி 18 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

அம்பாறை - கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாண்டிருப்பு கடற்கரையில் T-56 துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி என்பவற்றுக்கு  பயன்படுத்தக்கூடிய 14 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இவை நேற்று (17)காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த கடற்கரைப்பகுதியில்  ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் தோட்டாக்களை கண்டெடுத்தனர். 

இதில் 12 தோட்டாக்கள் இதுவரை பயன்படுத்தப்படாதது என்றும் 2 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டவை என்றும் தெரியவந்துள்ளது. 

கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

கல்முனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X