2024 மே 03, வெள்ளிக்கிழமை

கடல் கொந்தளிப்பால் மீனவர்கள் அச்சம்

Mayu   / 2023 டிசெம்பர் 05 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தின்  கடல் பரப்பில்  ஏற்படும் கடல் கொந்தளிப்பால் மீனவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர். 

பயன்தரும் தென்னைமரங்கள் சேதமடைள்ளதாகவும், தோணி மற்றும் படகுகளையும் நிறுத்திவைப்பதற்கு தற்போது போதிய இடவசதியும் , தமது மீன்பிடி உபகரணங்களை பாதுகாத்து வைப்பதற்கான மீன்வாடிகளும்  இல்லாமலிருப்பது தமக்கு பெரும்கவலையளிப்பதாகவும் , இந்த நிலமைஏற்படுவதற்கு ஒலுவிலில் அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகமும் ஒரு காரணமாகும் என  பிரதேச  மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்தற்போது கடலரிப்பை தடுப்பதற்கான தடுப்புக் கல் இடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறாக தொடர்ச்சியாக கடலரிப்பினால் கடற்கரை பிரதேசம் காவு கொள்ளப்பட்டு போகுமேயானால் எதிர்காலத்தல் இப்பிரதேசத்தில் கடற்கரையொன்று முழுமையாக இல்லாமல்போனலும்  போகலாம் என்ற அச்சம் இப்பிரதேசமக்களிடையே அதிகரித்துள்ளது.

பாறுக் ஷிஹான் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .