Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Janu / 2023 செப்டெம்பர் 25 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பெரியநீலாவணை இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத்திட்டத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரினால் பாரிய சுகாதார சீர்கேடு இடம்பெறுவதாக அங்குவாழும் குடியிருப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட 96 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத் திட்டத்தில் 18 வருங்களாக முறையான வடிகான் இன்மையால் சமையலறைக் கழிவுநீர், குழியலறைக் கழிவுநீர் மற்றும் மலசலகூட கழிவுகள் போன்றவை வீட்டுத்திட்டத்தின் பின்புறங்களில் தேங்கிநின்று பாரிய அளவிலான நுளம்புகளைப் பெருக்கி டேங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன.
மக்கள் செறிந்து வாழும் இந்த வீட்டுத்திட்டத்திலும் அதனை அண்டிய குடியிருப்புகள், பாடசாலை, வைத்தியசாலை, பொலிஸ் நிலையம் போன்ற அரச நிறுவனங்களிலும் பாடசாலை மாணவர்கள், முதியவர்கள், நோயாளர்கள், அரச அதிகாரிகள் என பலரும் வாழ்வதால் தேங்கிநிற்கும் கழிவுநீரால் மாத்திரமன்றி பருவமழை ஏற்படுகின்ற காலத்தில் தேங்கி நிற்கும் மழைநீராலும் இலகுவில் நோய்த் தொற்று ஏற்பட்டு இறக்கும் அவல நிலையும் காணப்படுகின்றது.
பாறுக் ஷிஹான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
42 minute ago
42 minute ago
2 hours ago