2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புதிய நியமனம் வழங்கி வைப்பு

Editorial   / 2021 நவம்பர் 08 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.அறூஸ்

அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரபின் முயற்சியால்,  அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர்களுக்கான நியமனம், இன்று (08) வழங்கி வைக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஒலுவில் அமைப்பாளர் ஏ.ஜே.எம்.அஸ்ஹர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபின் இணைப்புச் செயலாளர் யூசுப் நியாஸ், அட்டாளைச்சேனை இணைப்பாளர் எஸ்.எம்.அறூஸ், அதிபர் அப்துல் ஜப்பார், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜஸ்வத் இலாஹி  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அட்டாளைச்சேனை மற்றும் ஒலுவில் கிராமங்களில் உள்ள 06 இளைஞர்களுக்கு முதல்கட்டமாக இந்நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .