2025 மே 03, சனிக்கிழமை

புத்தர் சிலை வைக்க முஸ்தீபு; பாலமுனையில் பதட்டம்

Editorial   / 2022 மார்ச் 09 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர், எம்.எஸ்.எம். ஹனீபா, அஸ்ஹர் இப்றாஹிம்

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலை பிரதேசத்தில் உள்ள தனியார் காணியில் புராதன சின்னங்கள் உள்ள காணியென புத்தர் சிலையொன்றை நிறுவ பௌத்த பிக்குகளும், பெரும்பான்மை இளைஞர்கள் சிலரும் எடுத்த முயற்சியால் அந்த பிரதேசத்தில் இன்று (09) பதட்டம் நிலவியது.

கடந்த சில நாள்களாக அங்கு வருகைதந்த பெரும்பான்மை இளைஞர்கள் சிலர், சிலை நிறுவும் ஏற்பாடுகளை செய்து வந்ததாகவும் இன்று காணிபூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தபோதே, இந்த முரண்பாட்டு நிலை தோன்றியுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

ஸ்தலத்துக்கு  வருகைதந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.தவம், அட்டாளைசேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில், அட்டாளைசேனை பிரதேச சபை தவிசாளர் ஏ. அமானுல்லா, அட்டாளைசேனை பிரதேச சபை உறுப்பினர்கள், கிழக்கின் கேடயம் அமைப்பினர், பிரதேச மக்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

அதனையடுத்து, அக்கரைப்பற்று பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரின் தலையீடுகளுடன், அரசாங்க அதிபரூடாக பிரச்சினையை தீர்க்க முடிவு செய்யப்பட்டதுடன், அங்கிருந்து எல்லோரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பௌத்த சிலையை வைப்பது  தொடர்பாக பிரதேச சபையில் எவ்வித அனுமதியும் பெறவில்லையென தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X