2024 மே 02, வியாழக்கிழமை

புத்தாண்டை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்பு

Mithuna   / 2023 டிசெம்பர் 19 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

புத்தாண்டை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் வர்த்தக நிலையங்களில் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார்.

மேலும், சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்து சீனியை பதுக்கி வைத்து கூடுதலான விலைக்கு விற்பனை செய்து வரும் வர்த்தகர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர்களால் மாவட்டத்திலுள்ள சகல வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அத்தியவசியப் பொருட்களைப் பதுக்கி வைத்தல், நுகர்வோர் நலன் கருதி வர்த்தக நிலையங்களில் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை, கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், பொருட்களை பதுக்கி வைத்து சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தல், நுகர்வுக்குப் பொருத்தமில்லாத பொருட்களை விற்பனை செய்தல் பாரிய குற்றமாகுமெனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .