2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

போதையொழிப்பு பேரணி

Janu   / 2023 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனங்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்பி இளம் சந்ததியை ஆற்றலும், நல்லொழுக்கமுமிக்க சந்ததியாக உருவாக்கும் நோக்கில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மற்றும் அதன்  அனுசரணை வலையமைப்பான  "இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் போதையொழிப்பு பேரணியும், வீதி நாடகமும் புதன்கிழமை (30) கல்முனையில் இடம்பெற்றது.

கல்முனை பிரதான வீதியூடாக சென்ற பேரணி பொதுச்சந்தையை ஊடறுத்து கல்முனை இஸ்லாமாபாத் வீட்டுத்திட்டத்தை சென்றடைந்தது. அதனை தொடர்ந்து அக்கரைப்பற்று அருவி கலை மன்ற கலைஞர்களினால் போதையொழிப்பு, சிறுவர் துஸ்பிரயோகம், பெண்கள் கொடுமை போன்றன உள்ளடக்கிய கருவை கொண்ட வீதிநாடகம் அரங்கேற்றப்பட்டது.

நூருல் ஹுதா உமர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .