Editorial / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
நீதி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் மத்தியஸ்த சபை பற்றிய கிராம மட்ட விழிப்புணர்வுக் கலந்துரையாடல், பாண்டிருப்பு, திரௌபதி அம்மன் கோவில் வளாகத்தில் இன்று (07) நடைபெற்றது.
மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் கல்முனை வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.இராஜ்குமாரின் ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது, மத்தியஸ்த சபை பற்றிய விழிப்புணர்வு மற்றும் மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள், பிணக்குகளை எவ்வாறு ஆற்றுப்படுத்துதல் போன்றவை பாண்டிருப்பு 02 கிராம சேவகர் பிரிவு மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டன.
இந்த விழிப்புணர்வுக் கலந்துரையாடலில், கல்முனை மத்தியஸ்த சபை தவிசாளர் இ.சந்திரசேகரம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பல்வேறு தெளிவூட்டல்களை மக்களுக்கு வழங்கினார்.
25 minute ago
55 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
55 minute ago
1 hours ago
5 hours ago