2024 மே 03, வெள்ளிக்கிழமை

மாணவிகளிடம் சேஷ்டை ; எதிராக சட்ட நடவடிக்கை

Freelancer   / 2023 நவம்பர் 15 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

நிந்தவூர்  பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட  பிரதேசங்களிலுள்ள  பாடசாலைகளுக்குச்  செல்லும்  மாணவிகளுக்கு  வீதிகளில்  தொந்தரவு  செய்பவர்களை கைது செய்து  சட்ட  நடவடிக்கை  எடுக்கப்படவுள்ளதாக,  நிந்தவூர்  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பிரதான  பொலிஸ்  பரிசோதகர்  புதன்கிழமை (15) தெரிவித்தார்.

நிந்தவூர் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் குறிப்பாக பெண் பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைகள், பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பமாகும் மற்றும் முடிவடையும் நேரங்களில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் மாணவிகளுக்குப் பின்னால் கூட்டமாகச் சென்று தொந்தரவு செய்வதோடு, தொலைபேசியில் புகைப்படம் எடுப்பதாகவும் பெற்றோர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த  பெண்  பாடசாலைகள்  அமையப்  பெற்றுள்ள  பிரதேசங்களில்  குறிப்பாக  உள்  வீதிகளில்,  பாடசாலை  ஆரம்பிக்கும்  முடியும்  நேரங்களில்  விசேட  போக்குவரத்து  பொலிஸாரை  சிவில்  உடையில்  சேவையில்  ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும்  தெரிவித்தார்.

மேலும் கைது  செய்யப்படுபவர்களுக்கு  எதிராக  நீதி மன்றினுாடாக  சட்ட நடவடிக்கை  எடுக்கப்படுமெனவும்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .