2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் சிக்கி உயிரிழந்த சருகுப் புலி குட்டி

Editorial   / 2023 ஓகஸ்ட் 25 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டம்  மாவடிப்பள்ளி  -காரைதீவு பகுதியை இணைக்கும் பிரதான வீதியில்   சருகுப்புலி அல்லது காட்டுப்பூனையினத்தை சேர்ந்ததென நம்பப்படும் குட்டியொன்று   ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.

 மக்கள் வாழும் பகுதியில்  வியாழக்கிழமை  (24) இரவு  சருகுப்புலி   உள் நுழைந்து  கிராம வாசிகளின் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் இம்மாவட்ட  பொதுமக்கள் சிலர் குறித்த சருகுப்புலி போன்ற பூனை இனங்களை   பிடித்துள்ளதுடன்      வனஜீவராசி திணைக்கள  அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவமும் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X