2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

கொடியேற்றம்...

Janu   / 2026 ஏப்ரல் 22 , பி.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

விநாயகரின் திருவுருவத்தையே கோபுரமாகக் கொண்டு, கிழக்கு மாகாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் மட்டக்களப்பு, தேற்றாத்தீவு அருள்மிகு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம், புதன்கிழமை (22) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நீண்ட வரலாற்றைக் கொண்டதுடன், 67 அடி உயரமான பிள்ளையார் உருவத்தைக் கோபுரமாகக் கொண்டுள்ள பெருமைக்குரிய ஆலயமாக இக்கோயில் திகழ்கிறது. இன்று காலை குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்திலிருந்து, யானை மீது கொடிச்சீலை எடுத்துச் செல்லும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்களின் கலாசார நடன ஊர்வலம் முன்செல்ல, பெருமளவான பக்தர்கள் புடைசூழ யானையில் கொடிச்சீலை ஆலயத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கிரியைகள் யாவும் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ பத்ம நிலோஜ ஈசான சிவம் தலைமையிலான சிவாச்சாரியர்களினால் நடாத்தப்பட்டன.

பாலகிருஷ்ணா

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .