2026 மார்ச் 26, வியாழக்கிழமை

தேற்றாத்தீவு வட பத்திரகாளி அம்மன் ஆலய சங்காபிஷேகமும், பாற்குடபவனியும்...

Mayu   / 2026 மார்ச் 26 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் தேற்றாத்தீவு வட பத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத் திருச்சடங்கை முன்னிட்டு, பாற்குடபவனியும், சங்காபிஷேகமும் பக்தி பூர்வமாக,வியாழக்கிழமை (26) நடைபெற்றது.

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாற்குடபவனி பக்தர்களால் எடுத்து வரப்பட்டு தேற்றாத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள வட பத்திர காளிக்கு பாலபிஷேகம் பக்தி பூர்வமாக நடைபெற்றது.

ஆலயத்தில் விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகி சுவாமி உள் வீதி உலா வந்து, 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

வ.சக்தி 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .