2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

Freelancer   / 2025 மே 25 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில், கடந்த 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. எனினும், இது லேசான அளவிலேயே பாதிப்புகளை ஏற்படுத்தும் என வைத்தியர்கள் கூறி வருகின்றனர். 

இந்நிலையில், நாடு முழுவதும் 257 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி, மராட்டியம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் இதுவரை மொத்தம் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 32 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

 கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், ஞாயிற்றுக்கிழமை (25) முதல் மக்களிடம் கொரோனா பரிசோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X