A.K.M. Ramzy / 2021 மே 19 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

கோவில்பட்டி
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள லாஸ்பேட்டையில் வசித்து வந்த எழுத்தாளர் கி.ரா,99ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார்.
இடைச்செவலில் உள்ள தோட்டத்தில் அரசு மரியாதையுடன் எழுத்தாளர் கி.ரா.வின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் புதுச்சேரி அரசு சார்பில் பொலிஸாரின் மரியாதை, அரசு தரப்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
கி.ரா.வின் உடலுக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., எழுத்தாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .