Freelancer / 2025 ஜூன் 03 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, தற்போது 4,000ஐ நெருங்கிவிட்டது.
திங்கட்கிழமை (2) நிலவரப்படி, நாட்டில் 3, 961 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நாட்டில் கேரளாவில் அதிகபட்ச தொற்று உள்ளது. அங்கு 1435 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தில் 506 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். இதன் தொடர்ச்சியாக டெல்லியில் 483 பேரும், குஜராத்தில் 338 பேரும், கர்நாடகத்தில் 253 பேரும், தமிழ்நாட்டில் 189 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் 157 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். புதுச்சேரியில் 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் முந்தைய தினத்தைவிட திங்கட்கிழமை (2) பாதிப்பின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தற்போதைய கொரோனா பரவலில் உயிர்ப்பலி எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.
18 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago