A.K.M. Ramzy / 2021 மே 18 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கலாம் என்பதால் அந்த நாட்டுடனான விமான போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பதிவில், “சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ள கொரோனாவின் புதிய திரிபு குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது. இது இந்தியாவில் மூன்றாவது அலையாக வரக்கூடும். எனவே, சிங்கப்பூர் உடனான விமானப் போக்குவரத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்றும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டுமென்றும் நான் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago