2026 மே 04, திங்கட்கிழமை

சென்னையில் பயணத் தடை

A.K.M. Ramzy   / 2021 மே 18 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

"சென்னை  348 பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதற்குள்ளேயே மக்களை இயங்க வேண்டுமெனவும் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல அனுமதி இல்லையெனவும்  அவ்வாறு செல்ல ஈ-பதிவு கட்டாயம். ஈ-பதிவு இல்லாமல் செல்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என சென்னை பொலிஸார்  அறிவித்துள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்றுப்பரவல் மொத்த தமிழக பரவலில் 25% என்கிற அளவில் உள்ளது. தினசரி உயிரிழப்பும் மொத்த தமிழக அளவில் 20% லிருந்து 25% ஆக பதிவாகிறது. சென்னையில் 80 இலட்சத்துக்கு மேற்பட்டோர் வசிக்கும் நிலையில் ஊரடங்கை மதிக்காமல் இருக்கும் போக்கு அதிகரித்துள்ளது.

இதையடுத்து பொதுமக்கள் நடமாட்டத்தை குறிப்பிட்ட பகுதிக்குள்ளேயே சுருக்கி கண்காணிக்கும் புதிய முறையை அமுல்படுத்தியுள்ளனர். சென்னையை 348 பிரிவுகளாக பிரித்து அதற்குள்ளேயே சென்று வர ஈ-பதிவு கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .