2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தடுப்பூசி ஒவ்வாமையால் ஒருவர் பலி

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 16 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடில்லி

கொரோனா தடுப்பூசிக்கு பிந்தைய, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஒவ்வாமையால் ஒருவர் பலியானதை, மத்திய சுகாதார அமைச்சக குழு உறுதி செய்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிலர், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஒரு வகை அலர்ஜியால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களில் சிலர் பலியானதாகவும் பொதுமக்களிடையே அச்சம் எழுந்தது. இதையடுத்து, தடுப்பூசிக்கு பிந்தைய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, மத்திய சுகாதார துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் தடுப்பூசிக்கு பின் ஒவ்வாமையால் பலியானதாக கூறப்படும், 31 பேரின் உடல்களில் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவர்களில், மார்ச் 8இல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட, 68 வயது நபர் மட்டுமே, தடுப்பூசிக்கு பிந்தைய, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஒரு வகை ஒவ்வாமையால் பலியானதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதுவரை, 26 ஆயிரத்து, 200க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிக்கு பிந்தைய ஒவ்வாமை ஏற்பட்டதாக, மத்திய சுகாதார துறை கூறி உள்ளது. இருப்பினும் இதனால் மரணம் ஏற்படுவது மிக மிக அரிதானது என, ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X