2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

தாய்க்கு 2 ஆவது திருமணம் செய்து வைத்த மகள்

Editorial   / 2022 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது தாயார் தனிமையில் தவித்து வருவதை உணர்ந்த மகள், தாய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த சம்பவமொன்று திருவனந்தபுரத்தில் இடம்பெற்றுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் 59 வயதான பெண்ணின் கணவன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டன. அப்பெண் மட்டுமே தணிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் தனது தாயார் தனிமையில் தவித்து வருவதை உணர்ந்த மகள்களில் ஒருவர், கண்டிப்பாக தனது தாயாருக்கு ஒரு துணை வேண்டும் என்று சிந்திக்கத்தொடங்கினார்.   

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த  63 வயதானவர் தனது தாய்க்கு ஏற்ற துணை என முடிவு செய்தார்.   

தனது தாயின் தனிமை பற்றியும், அவருக்கு ஒரு துணை வேண்டும், அது நீங்களாக இருந்தால் மிகவும் நல்லது என்று உருக்கமாக அவரிடம் கூறினார் பிரசிதா. இதனை புரிந்து கொண்டவர் 2-வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.  

இருவரின் பிள்ளைகளும் அதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. அதன் பின்னர், ​கோவில் வைத்து இருவருக்கும் திருமணம் செய்துவைக்கப்பட்டது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X