2025 ஜூலை 26, சனிக்கிழமை

திருமணத்திற்குச் சென்ற 25 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 06 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணமொன்றுக்குச் சென்ற பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் உத்தரகாண்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 திருமண விழாவொன்றில் பங்கேற்பதற்காக , லால்தாங் பகுதியில் இருந்து பிரோன்கால் பகுதிக்கு சுமார் 50 க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு பயணித்த பஸ்ஸே,  வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக்கோர விபத்தில்  25 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், பலர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X