Ilango Bharathy / 2023 மே 31 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை சீருடைகளில் வரும் மாணவர்களை அரச பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து வரும் 7ஆம் திகதி முதல் பாடசாலை திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், பாடசாலை சீருடைகளில் வரும் மாணவர்களை அரச பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என போக்குவத்து துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பஸ்பயண அட்டையை காண்பித்து மாணவர்கள் பயணம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீருடை அணிந்திருந்தாலோ அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை பஸ்ஸில் இருந்து இறக்கி விடப்பட்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
7 minute ago
22 minute ago
36 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
36 minute ago
46 minute ago