2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மணிகண்டனின் முன் பிணை மனு தள்ளுபடி

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 16 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை 

அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அ.தி.மு.க.) முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தார்நடிகை சாந்தினி. திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றியதாகவும், கருகலைப்பு செய்ததாகவும் கூறி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டின் பேரில் அடையாறு மகளிர் பொலிஸார்  மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்பிணை கேட்டு மணிகண்டன்   உச்ச நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போது, ஜூன் 9ஆம் திகதி  வரையில் மணிகண்டனை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்து இருந்தது.

 இந்த நிலையில் இந்த மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. நீதிபதி அப்துல்குத்தூஸ் விசாரித்தார். மணிகண்டனின் முன்பிணை மனுவை தள்ளுபடி செய்து அவர் உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X