2025 ஜூலை 24, வியாழக்கிழமை

லண்டன் சந்திப்பை முதலீட்டு களமாக்கிய மேத்தா

Freelancer   / 2022 நவம்பர் 21 , பி.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஷ்மீர் பள்ளத்தாக்கில் முதலீடு செய்து, அதன் பலனைப் பெற வருமாறு உலக முதலீட்டாளர்களுக்கு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தலைமைச் செயலாளர் அருண் குமார் மேத்தா அழைப்பு விடுத்துள்ளார்.

லண்டனில் உள்ள கார்ப்பரேட் ஆளுமை மற்றும் நிலைத்தன்மை குறித்த லண்டன் குளோபல் கன்வென்ஷன் 2022 இல், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே மேற்குறிப்பிட்ட அழைப்பை அவர் விடுத்தார்.

'செயல்படும் மற்றும் சிறந்த உலகளாவிய போக்குகளை உருவாக்கும் ஒரு பயனுள்ள சபையை உருவாக்குதல்' என்ற கருப்பொருளில், இந்தியாவின் பணிப்பாளர்கள் நிறுவனம் குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பரந்த முதலீட்டு வாய்ப்புகளை ஆராய வருமாறும் யூனியன் பிரதேசத்தை அபிவிருத்தி மற்றும் செழிப்பு மூலம் மாற்றுவதற்கான முயற்சிகளில் ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தை ஆதரிக்குமாறு அவர் அவர்களை வலியுறுத்தினார்.

உலகளாவிய நிகழ்வில் தான் பங்கேற்பது உலகளாவிய வணிக சகோதரத்துவத்துக்கு மத்தியில் நம்பிக்கையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும், ஜம்மு மற்றும் காஷ்மீரின் பலத்தை முதலீட்டு இடமாக வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு சுமார் 14 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் யூனியன் பிரதேசத்துக்கு வருகை தந்துள்ளதாகவும், பார்வையாளர்களுக்கு புதிய மற்றும் மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் அசாதாரணமான சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நிர்வாகம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் பிரதிநிதிகளுக்கு தெரிவித்தார்.

சாகச மற்றும் யாத்திரை, ஆன்மீகம் மற்றும் மருத்துவ சுற்றுலா போன்றவற்றில் யூனியன் பிரதேசம் மிகப்பெரிய திறனை வழங்குகிறது என்றார்.

தொழில்துறையில் பொது-தனியார் கூட்டாண்மையை எளிதாக்குவதற்கு நிர்வாகம் தொழில்துறை நில ஒதுக்கீடு கொள்கை மற்றும் ஜம்மு-காஷ்மீர் தனியார் தொழில்துறை தோட்ட மேம்பாட்டுக் கொள்கையை கொண்டு வந்துள்ளது என்றார். 

காலக்கெடுவுக்குள் அனைத்து அனுமதிகளையும் பெறுவதற்கு ஒரே ஒரு தீர்வாக ஒற்றைச் சாளர போர்டல் தொடங்குவது பற்றிய விவரங்களையும் தலைமைச் செயலாளர் வழங்கினார். 

"ஜம்மு-காஷ்மீர் அரசாங்கம் அபிவிருத்திப் பாதையில் உள்ள தளைகளை உடைக்க தைரியமான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்தது மற்றும் யூனியனின் தேசிய பொருளாதாரப் பாதையுடன் ஒருங்கிணைப்பை நோக்கி நகர்கிறது, ஒரு வளமான மற்றும் தன்னிறைவு கொண்ட யூனியன் பிரதேசமாக மாறுகிறது," என்று அவர் கூறினார்.
 
யூனியன் பிரதேசத்தை 'வளமான மற்றும் முற்போக்கான பிராந்தியமாக' மாற்ற அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று பங்கேற்பாளர்களுக்கு உறுதியளித்த அவர், விவசாயம், தோட்டக்கலை மற்றும் சேவைத் துறையை மையமாகக் கொண்ட ஒரு வலுவான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது எனவும் சிறந்த நிலம் மற்றும் நீர் ஆதாரங்களைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .