Freelancer / 2025 மே 26 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாராணசியில் மந்திரங்கள் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல்முறையாக மே 25இல் தொடங்கிய இந்த முகாமுக்கு முதல் நாளில் 42 நோயாளிகள் வந்திருந்தனர்.
மந்திரங்களின் சக்தியை மக்களிடம் பரப்புவதற்காக காசி எனும் வாராணசியில் முதன்முறையாக மந்திர சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.
21 நாள் மந்திர சிகிச்சை முகாமில், நோயாளிகளுக்கு 3,000 மந்திரங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
அன்றாடம் தினசரி 3 மணி நேரம் 14 நிமிடங்களுக்கு இந்த சிகிச்சை நடைபெறுகிறது. முகாமில் உள்ள மந்திர நிபுணர்கள் நோயாளிகளின் நோய்க்கு ஏற்ப மந்திரங்களை ஓதி சிகிச்சை அளிக்கின்றனர்.
காலை 1.30 மணி நேரமும் மாலை 1.30 மணி நேரமும் தியானம், யோகா மற்றும் பிராணாய நாமத்துடன் மந்திர சிகிச்சை தொடங்கப்பட்டது. இந்த முகாமில் சிகிச்சை பெற முதல் நாளில் 42 நோயாளிகள் வந்தனர்.
இந்த முகாமை, வாராணசியின் ஷுத்திபூரிலுள்ள ரிஷிவ வேத ஆராய்ச்சி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ஜைன மந்திரங்களும் ஓதி சிகிச்சைகள் குணப்படுத்தப்பட உள்ளன.
18 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago