2026 மார்ச் 30, திங்கட்கிழமை

2ஆவது நாளாக 3,800 விமானங்கள் ரத்து

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவில் வீசிவரும் பனிப்புயல் காரணமாக 2ஆவது நாளாகவும்  3,800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்புயலின் கோரத்தாண்டவத்தால் நியூயோர்க் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமான பஃபலோவில் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கின்றன.

இதன் காரணமாக வீடுகள், மரங்கள், வாகனங்கள் என அனைத்தும் வெண்பட்டுப் போர்த்தியது போன்று காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிழலையில் பனிப்புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 60ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .