Ilango Bharathy / 2023 பெப்ரவரி 09 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் ஒரே பிரசவத்தில் அடுத்தடுத்து பிறந்த `கேட், ஈவ், மேரி` என்ற 3 சகோதரிகளை ஸ்டீவோ என்ற நபர் அண்மையில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
முதலில் கேட்டை, ஸ்டீவோ காதலித்து வந்த நிலையில், மற்ற இரு சகோதரிகளைச் சந்தித்து பேசியுள்ளார். இதன்போது அவர்களுக்கும் ஸ்டீவோ மீது காதல் ஏற்பட்டதால் சகோதரிகள் மூவரும் சேர்ந்து ஸ்டீவோவை திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் தனது 3 மனைவிகளுடனும் அட்டவணை யிட்டு வாழ்ந்து வருவதாக ஸ்டீவோ தெரிவித்துள்ளார்.
அதாவது திங்கள்கிழமை மேரியுடனும், செவ்வாய்க்கிழமை கேட்டுடனும், புதன்கிழமை ஈவ்வுடனும் ஸ்டீவோ வாழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் 3 பேருடன் சேர்ந்து வாழ்வது ஒன்றும் பெரிய விடயம் இல்லை என ஸ்டீவோ தெரிவித்துள்ளார்.
1 hours ago
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
03 Feb 2026