Ilango Bharathy / 2023 ஜனவரி 19 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்‘ என அழைக்கப்படும் உசைன் போல்டிடம் பங்குச்சந்தை முதலீட்டு நிறுவனமொன்று 12.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப்பதக்கங்கள் வென்றுள்ள உசைன் போல்ட், தான் ஈட்டிய வருமானத்தின் பெரும்பகுதியை ஜமைக்காவிலுள்ள முதலீட்டு நிறுவனமொன்றில் 10 ஆண்டுகளாக முதலீடு செய்துவந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த முதலீட்டு கணக்கிலிருந்து திடீரென12.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயமானதாகவும், தற்போது வெறும் 12,000 அமெரிக்க டெலர்களே எஞ்சியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரே பணத்தை கையாடல் செய்துள்ளார் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் உசைன் போல்டின் வாழ்நாள் சேமிப்பு முழுவதும் மாயமானதால் அதனை மீட்க பொலிஸார் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.
40 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
3 hours ago