Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 17 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் முல்தான் நகரில் உள்ள மருத்துவமனையொன்றின் பிணவறைக் கூரையின் மீது அழுகிய நிலையில் 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பஞ்சாப் மாகாண முதலமைச்சரின் ஆலோசகர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் குறித்த மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு நடத்தியதோடு, அவ்உடல்களை முறைப்படி அகற்றும் படியும் உத்தரவிட்டனர்.

அத்துடன் உயிரிழந்தவர்களின் உடல்களை கூரையின் மேல் வீசிய மனிதாபிமானமற்ற செயலை செய்த ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநில அரசுத் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
24 minute ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
7 hours ago
7 hours ago