Ilango Bharathy / 2023 பெப்ரவரி 14 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யா - உக்ரேன் இடையே போர் இடம்பெற்று வரும் நிலையில், 5,000க்கும் மேற்பட்ட ரஷ்யக் கர்ப்பிணிகள் ஆர்ஜென்டினாவுக்குச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மகப்பேறுக்கு ஒருவார காலமே எஞ்சியிருக்கும் நிலையில், பிறக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு ஆர்ஜென்டினாவின் குடியுரிமையைப் பெற்றுக் கொள்ளவே ஏராளமாக ரஷ்யக் கர்ப்பிணிகள் அந்நாட்டுக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக போலி ஆவணங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளாக ஆர்ஜெண்டினாவுக்குச் செல்லும் ரஷ்யக் கர்ப்பிணிகள்,அங்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த பின்னரே ரஷ்யாவுக்கு திரும்பிச் செல்கின்றனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago