Freelancer / 2026 மார்ச் 01 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, பதற்றத்தைத் தணிப்பதற்கான பல்வேறு வெளியேறும் வழிகள் தன்னிடம் இருக்கின்றன என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான தாக்குதல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு, முதன்முறையாக இந்த நடவடிக்கை குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
'அக்சியோஸ்' செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய தொலைபேசி நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரான் விவகாரத்தில் தான் கையாளக்கூடிய இருவேறுபட்ட அணுகுமுறைகளை ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் கூறுகையில், நாங்கள் இந்த நடவடிக்கையை இரண்டு மூன்று நாள்களில் முடித்துவிட்டு ஈரானியர்களிடம் இவ்வாறு கூறலாம் 'உங்கள் அணுசக்தி திட்டத்தை நீங்கள் மீண்டும் கட்டமைக்கத் தொடங்கினால், இன்னும் சில ஆண்டுகளில் உங்களை மீண்டும் சந்திப்போம் எனத் தெரிவித்தார். (a)
56 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago