2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குரங்குகளுக்கு விருந்து

Ilango Bharathy   / 2022 நவம்பர் 30 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தாய்லாந்தின்  தலைநகரான பாங்காக்கில் உள்ள லோப்பூரி என்ற இடத்தில் ஒவ்வொரு வருடமும் ‘குரங்குகள் திருவிழா‘ ( Monkey Feast Festival ) கொண்டாடப்படு வருகின்றது.

தாய்லாந்து மக்கள், குரங்குகளைக்  கடவுளின் அம்சமாகப்  பார்ப்பதனால், அவைகளுக்கு அங்கு சிறப்பு மரியாதை கொடுக்கும் வகையிலும், நகரத்தில் வாழும் குரங்குகளை அங்கீகரிக்கும் வகையிலும் கடந்த 1989ஆம் ஆண்டில் இருந்து இத் திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இத்திருவிழாவின் போது  ஆயிரக்கணக்கான குரங்குகள் குறித்த பகுதிக்கு  படையெடுப்பதாகவும், அங்கு மக்கள், குரங்குகளுக்காக தயாரித்து வைத்திருக்கும் உணவுகளை உண்டுவிட்டுச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் அப் பகுதியில்  சுற்றாலா துறையை மேம்படுத்தும் முயற்சியாகவும் இவ்வழக்கம் பின்பற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .