2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சோமாலியாவில் கொடூரம்; 100 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 31 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோமாலியாவில் கடந்த 29 ஆம் திகதி, பயங்கரவாதிகளால்  நிகழ்த்தப்பட்ட இரட்டைக் கார்குண்டு வெடிப்பில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.

 சம்பவத்தினத்தன்று மொகதிஷு நகரில் பஸ்ஸொன்றுக்கு அருகே முதல் குண்டுவெடிப்பும், உணவு விடுதிகள் அதிகம் உள்ள  பகுதியில் மற்றொரு குண்டுவெடிப்பும் நிகழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இக் கொடூரத்தாக்குதல்களில் 100 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தாக்குதல்களுக்கு அல்-காய்தா இயக்கத்துடன் தொடா்புடைய அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பே காரணம் என அந்நாட்டு  அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X