Ilango Bharathy / 2023 ஜனவரி 18 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனர்கள் கரப்பான் பூச்சிகளை விலங்குகளுக்கு உணவாகவும், மருந்துகள் தயாரிக்கவும், அழகுச் சாதனப் பொருட்களின் உற்பத்திக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
கரப்பான் பூச்சிகளைப் பண்ணையில் வளர்ப்பது அருவருக்கத்தக்கதாகத் தோன்றினாலும், இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் கோடிக் கணக்கான ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது பொதுவாகச் சுவாசப் பிரச்சனைகள் மற்றும் இரைப்பை பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாக சீனர்கள் கரப்பான்பூச்சிகளைப் பயன்படுத்தி வருகின்றனர் எனவும், இவை தவிர வழுக்கை, வடுக்கள் ஏன் புற்றுநோய் கட்டிகளுக்குக் கூட கரப்பான் பூச்சிகளைப் பயன்படுத்தி தயாரிக்கும் மருந்துகளை சீனர்கள் பயன்படுத்தி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் கரப்பான் பூச்சிகளில் அதிகளவில் புதரச்சத்துக் காணப்படுவதாகவும் இதனால் விலங்குகள் மாத்திரமன்றி மனிதர்களும் இதனை விரும்பி உண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
41 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
3 hours ago