Ilango Bharathy / 2022 நவம்பர் 22 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானில் அண்மையில் ஹிஜாப்பினை முறையாக அணியவில்லை எனக் கூறி கைது செய்யப்பட்ட ‘மஹ்சா அமினி‘ என்ற இளம்பெண் பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்தார்.
இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹிஜாப்க்கு எதிரான போராட்டத்தை ஆதரித்து ஹிஜாப் அணியாமல் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட பிரபல ஈரானிய நடிகை ஹெங்கமே காசியானியை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோவில் ”இது எனது கடைசிப் பதிவாகக்கூட இருக்கலாம் ”என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago