2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வடமாகாண எறிபந்து போட்டி முடிவுகள்

Kogilavani   / 2014 மே 23 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


குணசேகரன் சுரேன், நா.நவரத்தினராசா
 

வடமாகாணத்தில் நடத்தப்பட்ட எறிபந்துப் போட்டியில் வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய அணியும் ஆண்களில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியும் சம்பியனாகின.

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் 5 கட்டங்களாக இடம்பெற்று வருகின்றன.

முதற்கட்டப் போட்டிகளான மரதனோட்டப் போட்டிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் முடிவுற்ற நிலையில் தற்போது, 2 ஆம் கட்டப் போட்டிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.

இதில் 19 வயதுப்பிரிவு ஆண்கள், பெண்களுக்கான எறிபந்துப் போட்டிகள் நேற்று வெள்ளிக்கிழமை (22) முதல் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் இடம்பெற்று வந்தது.

இதில் பெண்களில் வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயம் முதலிடத்தினையும், வவுனியா கனகராஜன்குளம் மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தினையும், யாழ்.தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.

ஆண்களில் யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரி அணி முதலிடத்தினையும், வவுனியா மாதர்பனிக்கர் மகிழ்குளம் கனிஷ்ட உயர்தரப் பாடசாலை இரண்டாமிடத்தினையும், யாழ்.தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி மூன்றாமிடத்தினையும் பெற்றன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .