2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பெண்கள் கரப்பந்தாட்டத்தில் யாழ்.அணிகள் முன்னிலையில்

Kanagaraj   / 2014 மே 26 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


- குணசேகரன் சுரேன்


வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டின் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் 5 கட்டங்களாக நடைபெற்று வருகின்ற நிலையில்;, பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டிகள் முல்லை வித்தியானந்தா கல்லூரியில் இன்று (26) இடம்பெற்றன. இப்; போட்டிகளில்; யாழ்.மாவட்ட பெண்கள் பாடசாலை அணிகள் முன்னிலை பெற்றுள்ளன.

இதில் 15 வயதுப்பிரிவில், யாழ்.வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் முதலிடத்தினையும், வவுனியா மாதர்பணிக்கர் மகிழன்குளம் வித்தியாலயம் இரண்டாமிடத்தினையும், முல்லை கலைமகள் வித்தியாலயம் மூன்றாமிடத்தினையும் பெற்றன.

17 வயதுப்பிரிவில், யாழ்.ஆவரங்கால் நடராஜா இராமலிங்கம் வித்தியாலயம் முதலிடத்தினையும், யாழ்.வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தினையும், யாழ்.பருத்தித்துறை பெண்கள் உயர்தரப் பாடசாலை மூன்றாமிடத்தினையும் பெற்றன.

19 வயதுப்பிரிவில், யாழ்.பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை முதலிடத்தினையும், முல்லை வித்தியானந்தா கல்லூரி அணி இரண்டாமிடத்தினையும், யாழ்.மகாஜனக் கல்லூரி அணி மூன்றாமிடத்தினையும் பெற்றன.

முதலாம் கட்டப் போட்டிகளான மரதனோட்டப் போட்டிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்று முடிந்தது. தற்போது இரண்டாம் கட்டப் போட்டிகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .