2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி கரப்பந்தாட்டத்தில் ஆதிக்கம்

Super User   / 2014 மே 27 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன், கனகரத்தினம் கனகராஜ்                                                                        
  15 வயதுப்பிரிவு

வடமாகாண பாடசாலைகள் ஆண்கள் கரப்பந்தாட்டப் போட்டியில் ஒரு முதலிடம் இரண்டு இரண்டாமிடங்கள் பெற்று யாழ்ப்பாணம் புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில், வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் 5 கட்டங்களாகத் தற்போது இடம்பெற்று வருகின்றன.

முதலாம் கட்டப் போட்டிகளான மரதனோட்டப் போட்டிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்டப் போட்டிகள் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்திலேயே இடம்பெற்று வருகின்றன.
 
இதில் ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டிகள் முல்லை வித்தியானந்தா கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றது.

15 வயதுப்பிரிவு ஆண்களுக்கான போட்டியில் யாழ்.கோப்பாய் மகா வித்தியாலயம் முதலிடத்தினையும், புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி அணி இரண்டாமிடத்தினையும், யாழ்.ஆவரங்கால் மகாஜன வித்தியாலயம் மூன்றாமிடத்தினையும் பெற்றன.

17 வயதுப்பிரிவு ஆண்களுக்கான போட்டியில் யாழ்.சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அணி முதலிடத்தினையும், யாழ்.புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி அணி இரண்டாமிடத்தினையும், யாழ்.ஆவரங்கால் மகாஜன வித்தியாலயம் மூன்றாமிடத்தினையும் பெற்றன.

19 வயதுப்பிரிவு ஆண்களுக்கான போட்டியில் யாழ்.புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி முதலிடத்தினையும், யாழ்.சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி இரண்டாமிடத்தினையும், மன்னார் றிசாத் பதியுதீன் மகா வித்தியாலயம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டன.
 
  15 வயதுப்பிரிவு

17 வயதுப்பிரிவு

17 வயதுப்பிரிவு

19 வயதுப்பிரிவு

19 வயதுப்பிரிவு

19 வயதுப்பிரிவு


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .