Janu / 2023 மே 30 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தி/அல் தாரீக் தேசிய பாடசாலையின் 55 வருட நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை பழைய மாணவர்களுக்கிடையிலான இரண்டாவது மாபெரும் "அல்தாரிக்கேயன்ஸ் மெகா ப்ளாஸ்ட் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள்"அல் தாரிக் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் கல்லூரியின் முதல்வர் ஐ.எம்.தௌபீக்,மற்றும் பழைய மாணவர்கள் ஒன்றியத்தின் செயலாளர் ஏ.ஜி.எம்.பஸால் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
மூன்று நாட்கள் நடைபெற்ற சுற்றுப் போட்டிகள் 8 ஓவர்களை கொண்ட அணிக்கு11 பேரைக் கொண்ட விலகல் அடிப்படையில் அமைந்திருந்ததோடு,24 அணிகளும் ஒன்றையொன்று எதிர்தாடின.
இறுதிப் போட்டிக்கு 2008 ஆம் ஆண்டு அணியும், 2015 ஆம் ஆண்டு அணியும் ஒன்றையொன்று மோதி 2008 ஆம் ஆண்டு அணி அல்தாரிக்கேயன்ஸ் மெகா ப்ளாஸ்ட் வெற்றிக் கிண்ணத்தினையும் பெறுமதியான பணப்பரிசிலையும் தனதாக்கி 2023 ஆம் ஆண்டுக்கான சாம்பியன் முத்திரையை பதித்தது.






அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .