R.Tharaniya / 2025 மே 13 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இணுவில் பகுதியைச் சேர்ந்த கஜிசனா தர்சன் என்ற சிறுமி நடைபெற உள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் 8 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான பிரிவு போட்டிக்கு தெரிவாகியுள்ளார். இது குறித்து அவரது தந்தை இன்று செவ்வாய்க்கிழமை (13) ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்தினார்.
இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், எனது மகள் 2025இல் நடைபெற உள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் எட்டு வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் போட்டியிடுவதற்கு தெரிவாகியுள்ளார்.
எட்டு வயதிலேயே தனது மகளுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். அதுமட்டுமல்ல, எனது மகள் இந்த ஆண்டு 5 சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளார். கடந்த மாதம் அல்பேனியாவில் நடைபெற்ற மேற்கு ஆசிய இளையோர்களுக்கான போட்டி நடைபெற்றது.
அந்த போட்டியில் பங்குபற்றுவதற்கு நிதி அனுசரணையாளர்கள் கிடைக்காததால் அதில் பங்குபற்ற முடியவில்லை. இவர் கடந்த வருடம் தேசிய ரீதியாக நடைபெற்ற சதுரங்க போட்டியில் முதலிடம் பெற்று, இலங்கையின் 8 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் உத்தியோகபூர்வ வீரராக தெரிவு செய்யப்பட்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பாடசாலைகள் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டு சர்வதேச வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.
மேலும் கடந்த டிசம்பர் மாதம் உலகளவிலான ரப்பிட் செஸ் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தில் காணப்பட்டார். எனவே அவர் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் எமது நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதற்கு நிதி வசதி தேவையாகவுள்ளது.
எனவே நிதி அனுசரணையாளர்கள் ஆதரவு வழங்கும் பட்சத்தில் எமது பிள்ளை மேலும் பல போட்டிகளில் பங்குபற்றி எமது மண்ணுக்கு பெருமை சேர்க்க வழிவகுக்கும் என்றார்.
பு.கஜிந்தன்


41 minute ago
43 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
43 minute ago
47 minute ago
2 hours ago